திருக்குறள் - 1048     அதிகாரம்: 
| Adhikaram: nalkuravu

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

குறள் 1048 - திருவள்ளுவர் - ThiruValluvar

"indrum varuvadhu kolloa nerunhalum" Thirukkural 1048 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருநலும் கொன்றதுபோலும் நிரப்பு-நேற்றும் வந்து என்னைக் கொன்றதுபோலும் துன்புறுத்திய வறுமை; இன்றும் வருவது கொல்-இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்! இதுமுந்தின நாள் அரும்பாடுபட்டுத் தன் வயிற்றை நிரப்பிய ஓர் இரப்போனின் இரங்கற் கூற்று. உம்மைகள் முறையே இறந்ததும் எதிரதும் தழுவிய எச்சம். ’கொல்’ ஐயம். ’ஓ’ இரங்கலிடைச்சொல். ’நிரப்பு’ மங்கல வழக்கு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்றும் வருமோ அந்தக் கொடுமை ? நெற்றுவரை கொலை செய்வதுப் போல் இருந்த வறுமை. (வறுமை வராதபடி வாழ்).

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நேற்றுக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ?

Thirukkural in English - English Couplet:


And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.

ThiruKural Transliteration:


indrum varuvadhu kolloa nerunhalum
kondradhu poalum nirappu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore