திருக்குறள் - 1171     அதிகாரம்: 
| Adhikaram: kanvidhuppazhidhal

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

குறள் 1171 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kandhaam kaluzhva thevan koloa thandaanhoi" Thirukkural 1171 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நின் கண்கள் கலங்கித் தம் அழ நீ அழுதல் கூடாதென்ற தோழிக்குச் சொல்லியது) தாம்காட்ட தண்டாநோய் யாம் கண்டது-தாம் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினாலன்றோ இத் தணியா நோயை யாம் அடைந்து; கண் தாம் கலுழ்வது எவன்கொல்-அங்ஙனமிருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி யழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே! இன்று அன்றுபோல் தாமே காட்டுவதல்லது யாம் காட்டுவது எங்ஙனம் என்பதாம். 'காட்ட' என்பதற்குரிய செயப்படுபொருள்வருவிக்கப்பட்டது. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணே நீ வருந்துவது எப்படி ? மாறாத நோயை தானாகவே கண்டு தனக்குள்ளே வருந்துகிறாய்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?

Thirukkural in English - English Couplet:


They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

ThiruKural Transliteration:


kaNdhaam kaluzhva thevan-koloa thandaanhoi
thaamkaatta yaamkan dadhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore