திருக்குறள் - 184     அதிகாரம்: 
| Adhikaram: purangooraamai

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

குறள் 184 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kannindru kannarach sollinum sollarka" Thirukkural 184 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக. 'பின் ' ஆகு பொருளது. சொல்வான் செயல் சொல்லின் மேலேற்றப் பட்டது. இதில் வந்துள்ளது முரணணி.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்கு முன்பாக நின்று தாட்சண்யமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; முன்னே இல்லாதபோது பின்னால் தனக்கு வரும் தீமையினைக் கருதாத சொற்களைச் சொல்லாது இருப்பாயாக.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


கண் எதிரே நின்று கண்ணை பார்த்து சொன்னாலும், சொல்லாக்கூடாது பின்விளைவுகளை முன்னே ஆராயாத சொல்லை.

Thirukkural in English - English Couplet:


In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

ThiruKural Transliteration:


kaNNindru kaNNaRach sollinum sollaRka
munnindru pinnoakkaach chol

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore