திருக்குறள் - 966     அதிகாரம்: 
| Adhikaram: maanam

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

குறள் 966 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pukazh indraal puththaennhaattu uyyaadhaal enmatru" Thirukkural 966 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி? இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது? (புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இகழ்வார்பின் சென்று நிலை - ஒருவன் தன்மான மின்றித் தன்னை அவமதிப்பார் பின்னே சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்து நிற்கும் புகழைத் தராது; புத்தேள் நாட்டு உய்யாது - மறுமையில் தேவருலகத்திற்குச் செலுத்தாது;மற்று என் - இனி அது அவனுக்கு வேறு என்ன பயனைச் செய்யும்? 'மற்று' பிறிதுப் பொருளிடைச் சொல். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை. இம் மூன்று குறளாலும் மானம் பேணாமையின் இழிபு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புகழ் இல்லாமல் புதுமை நாடி உயர்வு பெறாமல் என்ன பயன்? இகழ்வானவர்களின் பின் சென்றால் வரும் இழிநிலை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது.

Thirukkural in English - English Couplet:


It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.

ThiruKural Transliteration:


pukazh-indraal puththaeNnhaattu uyyaadhaal enmatru
ikazhvaarpin sendru nilai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore