திருக்குறள் - 262     அதிகாரம்: 
| Adhikaram: thavam

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

குறள் 262 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thavamum thavamutaiyaarkku aakum adhanai" Thirukkural 262 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும் ; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆதலால் , அத் தவத்தை முறபிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம். தவம் பல பிறப்புக்களில் தொடர்ந்து செய்ய வேண்டிய அரும் பெரு முயற்சி யாதலாலும், அறிவும் ஆற்றலும் உடையவரே அதை முற்ற முடியச் செய்யத்தக்கவராதலாலும், ஒரே பிறப்பில் எல்லாரும் அதை மேற்கொள்ள முடியாதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தவத்தினை மேற்கொள்ளுவதென்பதும் முற்பிறவித தவத் தன்மையுடையவர்களுக்கேயாகும். அத்தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது பயனற்ற முயற்சியேயாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.

Thirukkural in English - English Couplet:


To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).

ThiruKural Transliteration:


thavamum thavamutaiyaarkku aakum adhanai
aqdhilaar maeRkoL vadhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore