திருக்குறள் - 1172     அதிகாரம்: 
| Adhikaram: kanvidhuppazhidhal

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

குறள் 1172 - திருவள்ளுவர் - ThiruValluvar

"therindhunaraa noakkiya un kan parindhunaraap" Thirukkural 1172 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தெரிந்து உணரா நோக்கிய உண்கண்-மேல் விளைவதை ஆராய்ந்தறியாது அன்று காதலரைக் காதலொடு நோக்கிநின்ற என் மையுண்ட கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன்-இன்று இது நம்மால் வந்ததுதானே! ஆதலாற் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று அன்போடு! கூறுபடுத்துணராது, துன்புற்று வருந்துவது ஏன்? துன்பம் வருமுன் காவாதார் அதுவந்தபின் வருத்துவது வீண்மடச்செய்கை யென்பதாம்.மேல் விளைவாவது பிரிவினுல் நேரும் ஆற்றாமைத் துன்பம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தெரிந்து உணராமல் பார்வையால் விழுங்கிய கண் கருணையின்றி அவசரமாய் அல்லல்படுவது ஏன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ?

Thirukkural in English - English Couplet:


How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).

ThiruKural Transliteration:


therindhunaraa noakkiya un-kan parindhunaraap
paidhal uzhappadhu evan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore