திருக்குறள் - 263     அதிகாரம்: 
| Adhikaram: thavam

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

குறள் 263 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thurandhaarkkuth thuppuravu vaendi marandhaarkol" Thirukkural 263 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றை யவர்கள் - துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார் கொல்-துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்! துத்தல் உண்ணுதல் அல்லது நுகர்தல். துப்பரவு நுகரப்படும் பொருள்கள். தவம் சிறந்ததே யாயினும் , எல்லாருந் துறவியராயின் தவஞ் செய்வார்க்கு இன்றியமையாதவற்றை உதவுவார் ஒருவருமில்லாது போய் விடுவராதலின்,அவ்வுண்மையை ஓர் ஐயந்தழுவிய தற்குறிப் பேற்ற அணியால் உணர்த்தினார். 'கொல்' ஐயம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிக்கு உணவு முதலியன கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்துவிட்டார்கள் போலும்!

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


துறந்தவர்களுக்கு உதவிட எண்ணி மறந்துவிட்டார்களோ மற்றவர்கள் தவம் செய்வதை.

Thirukkural in English - English Couplet:


Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?.

ThiruKural Transliteration:


thuRandhaarkkuth thuppuravu vaeNdi maRandhaarkol
matrai yavarkaL thavam.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore