திருக்குறள் - 1287     அதிகாரம்: 
| Adhikaram: punarchchividhumpal

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

குறள் 1287 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uyththal arindhu punalpaai pavaraepoal" Thirukkural 1287 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரேபோல்-தம்மை யிழுத்துக்கொண்டு போகுமென்பதை அறிந்திருந்தும் வேகமா யோடுகின்ற வெள்ளத்திற் பாய்வார்போல் ; பொய்த்தல் அறிந்து புலந்து என்-ஊடல் நீடு நில்லாமை யறிந்திருந்தும் கணவரோடு ஊடி என்ன பயன்? புலத்தலால் துன்பமே யன்றி யின்பமில்லை யென்பதாம் . பாய்வார்போற் புலந்து என இசையும் . பொய்த்தலறிந்தே னென்பது பாடமாயின் , உய்த்தலறிய ஒடு நீருட் பாய்வார்போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை யறிந்தேன்;இனி இது செய்தற் பாற் றன்றென வுரைக்க என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருத்தமே. ஏகாரம் பிரிநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அடித்துச் செல்லும் என்று அறிந்தும் ஆற்றில் பாய்ப்பவர் போல் பொய்யாக போகும் என்று அறிந்தே ஊடல் கொள்கிறேன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

Thirukkural in English - English Couplet:


As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?.

ThiruKural Transliteration:


uyththal arindhu punalpaai pavaraepoal
poiththal arindhen pulandhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore