திருக்குறள் - 1177     அதிகாரம்: 
| Adhikaram: kanvidhuppazhidhal

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

குறள் 1177 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uzhandhuzhan thulneer aruka vizhaindhizhaindhu" Thirukkural 1177 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்-அன்று விரும்பி உண்ணெகிழ்ந்து மேன்மேலுங் காதலித்து அவரைக் கண்ட கண்கள்; உழந்து உழந்து உள்நீர் அறுக-இன்று தூக்கமின்றி யழுந்துன்பத்தால் வருந்தி வருந்தி தம்மகத்துள்ள நீரெல்லாம் வற்றிப்போக! அடுக்கு இடைவிடாமை பற்றி வந்தது. சினைவினை முதல்மேல் நின்றதுபோல,அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுது அழுது கண்ணிர் வற்றியது மகிழ்ந்து மகிழ்ந்து விரும்பி அவரைக் கண்ட கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!

Thirukkural in English - English Couplet:


Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.

ThiruKural Transliteration:


uzhandhuzhan thulneer aruka vizhaindhizhaindhu
vaenti avarkkanda kan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore