திருக்குறள் - 1022     அதிகாரம்: 
| Adhikaram: kutiseyalvakai

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

குறள் 1022 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aalvinaiyum aandra arivum ena irantin" Thirukkural 1022 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான்-முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்படும் இரண்டினையுமுடைய இடையறாத செயலால்; குடிநீளும்-ஒருவனது குடி உயரும். ஆள்வினை ஆண்டு நடத்துஞ் செயல். ஆனுதல்-நிறைதல். அறிவுநிறைதலாவது இயற்கை யறிவோடு செயற்கையறிவுஞ் சேர்தல். ஆள்வினை சோம்பலை நீக்கற்கும் ஆன்றவறிவு வெற்றிபெறச் சூழ்தற்கும் வேண்டியனவாம். ’நீள்வினை’ விடாமுயற்சி. குடிநீள்தல் தொடர்தலும் உயர்தலும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆழமான செயல்திறனும், ஆழ்ந்த அறிவும் என இரண்டின் தெடர்ச் செயலால் வளரும் வாழ்வு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.

Thirukkural in English - English Couplet:


The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.

ThirukKural English Meaning - Couplet -Translation:


One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

ThiruKural Transliteration:


aaLvinaiyum aandra aRivum ena-iraNtin
neeLvinaiyaal neeLum kuti.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore