திருக்குறள் - 929     அதிகாரம்: 
| Adhikaram: kallunnaamai

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

குறள் 929 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaliththaanaik kaaranam kaattudhal keezhnheerk" Thirukkural 929 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தௌ¤வித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தௌ¤வித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு வெறித்தவனை இது தகாதென்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைக் தீத்துரீஇய அற்று- நீர்க்குள் முழுகினவனை விளக்கொளியால் தேடிப்பார்த்தலை யொக்கும். விளக்கொளி நீருட் செல்லாது போன்று ஏதுரை கட்குடியன் மனத்துட் செல்லா தென்பதாம். களித்தானைக்காட்டுதல் என்பது களித்தானுக்குக் காட்டுதல் என்று பொருள்கொள்ளின் வேற்றுமை மயக்கமும் , களித்தானைக் காணச் செய்தல் என்று பொருள் கொள்ளின் வேற்றுமையியல்பும் , ஆம். இங்ஙனமே 'அவளைக் காட்டென்றானோ' என்னுங் கலித்தொகைத் தொடருங் கொள்ளப்படும் (72). 'கீழ்நீர'் இலக்கணப்போலி. 'துரீஇ' இன்னிசையளபெடை. இக்குறளால் அடிப்பட்ட கட்குடியனைத் திருத்த முடியாமை கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மது போதையில் களிப்பவரை காரணம் காட்டி மாற்ற முயல்வது நீருக்கு அடியில் குளிப்பவருக்கு தீப்பந்தம் கொடுப்பதைப் போன்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கள்ளுண்டு களித்தவனைக் காட்டி ‘இ·து நினைக்கும் ஆகாது’ என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்.

Thirukkural in English - English Couplet:


Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

ThiruKural Transliteration:


kaLiththaanaik kaaraNam kaattudhal keezhnheerk
kuLiththaanaith theeththureei atru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore