திருக்குறள் - 404     அதிகாரம்: 
| Adhikaram: kallaamai 2

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

குறள் 404 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kallaadhaan otpam kazhiyanhan raayinum" Thirukkural 404 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்-கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத்தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார். உம்மை அருமை குறித்து நின்றது. ஒட்பம்=அறிவொளி. ஒள்-ஒட்பு-ஒட்பம். ஒள்-ஒளி, ஒரோவழி=ஏதேனுமொரு சமையம், மிக அருகி. கல்லாதவனுக்குத் தோன்றும் ஒண்கருத்து. ஏ ர ல் (நத்தை) மணலில் ஊருங்கால் நேருங் கீறலில் தற்செயலாக அமையும் ஓர் எழுத்துவடிவம் போன்றதாகலின், அதை அவனது உண்மையறிவின் விளைவாகக் கருதார் என்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத்தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி அறிவு இல்லாதவர்களின் வரையறை கழிக்க முடியாத நல்லதாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அறிவுடையவர்கள்

Thirukkural in English - English Couplet:


From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

ThiruKural Transliteration:


kallaadhaan otpam kazhiyanhan Raayinum
koLLaar aRivudai yaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore