திருக்குறள் - 1023     அதிகாரம்: 
| Adhikaram: kutiseyalvakai

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

குறள் 1023 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kutiseyval ennum oruvarkuth theyvam" Thirukkural 1023 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிசெய்வல் என்னும் ஒருவற்கு-என் குடியை மேன்மேலுயர்த்தக் கடவேன் என்னும் பூட்கைகொண்டு, அதற்கேற்ற முயற்சியைச் செய்யும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்து உறும்-உதவி செய்யும் பொருட்டுத் தெய்வமும் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு முன் வந்து நிற்கும். சொல்லுதல் செயலையுந் தழுவிற்று. தறுதல் இறுகவுடுத்தல். ஒன்றைத் தப்பாது செய்து முடிப்பதாக உள்ளத்திற் பூணுதல் பூட்கை. குடிசெய்தல் வினை இறைவனுக்கும் இசைந்ததென்பது கருத்து.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குடும்பம் ஒவ்வொன்றும் சிறப்பாக செயல்பட வேண்டும் என முயலும் ஒருவற்கு தெய்வமும் தேவையானதை முன் வந்து உதவும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்’ என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன் வந்து உதவி நிற்கும்.

Thirukkural in English - English Couplet:


'I'll make my race renowned,' if man shall say,
With vest succinct the goddess leads the way.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

ThiruKural Transliteration:


kutiseyval ennum oruvaRkuth theyvam
matidhatruth thaanmunh thuRum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore