திருக்குறள் - 1136     அதிகாரம்: 

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

குறள் 1136 - திருவள்ளுவர் - ThiruValluvar

"madaloordhal yaamaththum ulluvaen mandra" Thirukkural 1136 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன். இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


( மடலூரும் நேரம் இன்றைக்குக் கழிந்துவிட்டதென்ற தோழிக்குச்சொல்லியது .) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - பேதைத் தன்மையுள்ள என் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதேயில்லை ; யாமத்தும் மடல் ஊர்தல் உள்ளுவேன் மன்ற - அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி . இனி , நாளைக் குறைமுடிப்பே னென்று கடத்தி வைக்க வேண்டாமென்பதாம் . ' பேதை ' யென்பது இங்குப் பருவங்குறியாது இளமையும் மடமையுங் குறித்து நின்றது . ' மன்ற ' தேற்றப் பொருளிடைச்சொல் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மடலூர்தலை நள்ளிரவிலும் நினைக்கிறேன் காரணம் மாற்ற முடியாத வேதனையை அடைந்தது இளம்பெண்ணாள் என் கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்!

Thirukkural in English - English Couplet:


Of climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

ThiruKural Transliteration:


madaloordhal yaamaththum uLLuvaen mandra
padal-ollaa paedhaikken kaN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore