திருக்குறள் - 1253     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

குறள் 1253 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maraippaenman kaamaththai yaanoa kurippindrith" Thirukkural 1253 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[மகளிர் காமம் மறைக்கப்படுமென்ற தோழிக்குச் சொல்லியது.] யான் காமத்தை மறைப்பேன்- யான் இக்காமத்தை என்னுள்ளே அடக்கிவைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றிவிடும்- ஆனால், அது என் கருத்துவழி நிற்காமல் தும்மல் போலத் திடுமென்று வெளிப்பட்டு விடுகின்றது. தும்மல்போலக் காமமும் அடங்குகின்றதில்லை யென்பதாம் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி தும்மல் போல் தோன்றிவிடுமே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

Thirukkural in English - English Couplet:


I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.

ThiruKural Transliteration:


maraippaenman kaamaththai yaanoa kurippindrith
thummalpoal thoandri vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore