திருக்குறள் - 1241     அதிகாரம்: 
| Adhikaram: nenjotukilaththal

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

குறள் 1241 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ninaiththondru sollaayo nenje enaiththondrum" Thirukkural 1241 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத் தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் . இஃது , உறுப்புக்கள் தம் நலனழிந்தவழி நிகழ்வதாலின் , உறுப்பு நலன் அழிதலின்பின் வைக்கப்பட்டது.] (தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[ தன் ஆற்றாமை தீருந் திறம் நாடியது . ] நெஞ்சே - என் உள்ளமே ; எவ்வ நோய் தீர்க்கும் மருந்து ஒன்று- இத்துன்ப நோயைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை ; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ - எத்தன்மைய தாயினும் ஒரு முறையை எண்ணி எனக்குச் சொல்ல மாட்டாயா ? பொதுவான மருந்தினால் தீரும் உடல்நோயன்றென்பாள் ' எவ்வநோய் ' என்றும் , கற்புத்தவிர எதையும் இழக்கும் மருத்துவ முறையாயினும் என்பாள் ' எனைத்தொன்றும் ' என்றும் ' கூறினாள் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்துச் சரியான ஒன்றைச் சொல்வாயா என் நெஞ்சே எதன் பொருட்டும் தீராத நோய் தீர்க்கும் மருந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ?

Thirukkural in English - English Couplet:


My heart, canst thou not thinking of some med'cine tell,
Not any one, to drive away this grief incurable?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?.

ThiruKural Transliteration:


ninaiththondru sollaayo nenje enaiththondrum
evvanoai theerkkum marundhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore