திருக்குறள் - 533     அதிகாரம்: 
| Adhikaram: pochchaavaamai

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

குறள் 533 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pochchaappaark killai pukazhmai adhu ulakaththu" Thirukkural 533 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மைக்கருத்து அறநூலார்க்கு மட்டு மன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம். இந்நெறிமை ( விதி ) அரசர்க்கு மட்டு மன்றி எல்லாத்தொழிலாளர்க்கும் ஒப்ப வுரியதாயிருத்தலால் , 'உலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு' என்றார் . இங்கு உலகம் என்றது தமிழகத்தை . எப்பால் நூலென்றதும் தமிழிலக்கியத் துறைகளையே . இன்றிறந்துபட்டுள்ள பண்டைத் தமிழிலக்கியத்திற் பெரும்பகுதி திருவள்ளுவர் காலத்தில் இறவாதிருந்தது . வடநூலார்க்குந் துணிவு என்று கூறாமையை நோக்குக.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறதி உள்ளவருக்கு புகழ் இல்லை, அது உலகத்தின் அனைத்து துறை எழுத்தாளர்களின் முடிவு.

Thirukkural in English - English Couplet:


'To self-oblivious men no praise'; this rule
Decisive wisdom sums of every school.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

ThiruKural Transliteration:


pochchaappaark killai pukazhmai adhu-ulakaththu
eppaalnhoo loarkkum thuNivu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore