திருக்குறள் - 618     அதிகாரம்: 
| Adhikaram: aalvinaiyutaimai

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

குறள் 618 - திருவள்ளுவர் - ThiruValluvar

"poriyinmai yaarkkum pazhiyandru arivarindhu" Thirukkural 618 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறி இன்மை யார்க்கும் பழி அன்று -மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது ; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டியவற்றை யறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது. அறியவேண்டுவன நால்வகைவலி , காலம் , இடம் முதலியன. ஒருவன் முற்பிறப்பிற் செய்தவினை செய்தவனாலும் அறியப்படாமையாலும் , பெரும்பாலும் நல்லோர் வறியநிலையிலும் தீயோர் செல்வ நிலையிலும் இருப்பதாலும் , சிலவினைகட்கு ஒரே முயற்சியும் , சிலவினைகட்குப் பலமுயற்சியும் சிலவினைகட்கு விடாமுயற்சியும் வேண்டியிருப்பதனாலும் ,ஊழ்பற்றியன்றி வினைபற்றியே மக்கட்குப் புகழும் பழியும் உண்டாம் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புலன் இல்லாமல் இருப்பது எந்த மனிதருக்கும் பழிக்கும் ஒன்றாக இருக்காது. செய்யவேண்டியதை செய்யாமல் இருந்தால் பழிக்கப்படும்.

Thirukkural in English - English Couplet:


'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

ThiruKural Transliteration:


poRiyinmai yaarkkum pazhiyandru aRivaRindhu
aaLvinai inmai pazhi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore