திருக்குறள் - 646     அதிகாரம்: 
| Adhikaram: solvanmai

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

குறள் 646 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaetpaththaanhj chollip pirarsol payan koatal" Thirukkural 646 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேட்பத்தாம் சொல்லி - தாம் பிறர்க்கு ஒன்றைச் சொல்லும்போது அவர் பின்னுங் கேட்க விரும்புமாறு இனிதாகவும் தெளிவாகவும் சொல்லி; பிறர் சொல் பயன் கோடல் - பிறர் சொல்லைத்தாம் கேட்கும்போதுமட்டும், அதிற் சொல்லினிமையும் பொருள் விளக்கமும் இலக்கண வொழுங்கும் இல்லா திருப்பினும், அதன் பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - குற்ற மற்ற சிறப்புடைய அமைச்சரின் இயல்பாம். பிறர்க்கு மேலும்மேலுங் கேட்க விருப்ப முண்டாகுமாறு எதையும் இன்பமாக எடுத்துக்கூறும் ஆற்றல், எல்லார்க்கும் இயற்கை யாகவோ செயற்கையாகவோ அமையாமையானும் , பிறர் சொல்வதன் பொருளை உணர்ந்து கொள்வதே தம் கருமவெற்றிக்கு வேண்டியதாதலானும், "வேட்ப ........... கோள்" என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்க்குத் தாம் சொல்லும்போது, அவர் கேட்பதற்கு விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லும்போது அச்சொல்லின் பயனைக் கொண்டறிதல் குற்றம் அற்றவரது துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டியதை சொல்வதும், அடுத்தவர் சொல்லின் பயனை கேட்டு அறிவதும், உன்னதத்தின் குறையற்றவர்களின் குறிக்கோள்.

Thirukkural in English - English Couplet:


Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

ThiruKural Transliteration:


vaetpaththaanhj chollip piRarsol payan-koatal
maatchiyin maasatraar koaL.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore