Sani Peyarchi Rasi Palan kadagam in Tamil – சனி பெயர்ச்சி ராசி பலன் கடகம்

On 2023-12-21 1:36:45

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan kadagam

சனி பெயர்ச்சி ராசி பலன் கடகம் - Sani Peyarchi Rasi Palan for kadagam in Tamil

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெற இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. உடல் சோர்வு அதிக அலைச்சல் ஏற்படும். உற்றார்- உறவினரிடம் பேச்சை குறைப்பது நல்லது. நேரத்திற்கு சாப்பிடுவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம் கூட தக்க நேரத்தில் திரும்பி வராத காரணத்தினால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. சில நேரங்களில் நீங்கள் நேரடியாக பணி புரிந்தால் மட்டுமே எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். அதிக முதலீடுகளை தவிர்ப்பது, அப்படி அவசியம் என்றால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் உங்கள் உடல் உபாதைகள் காரணமாக பணியில் கவனம் செலுத்த முடியாத ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவரிடம் வீண் பேச்சை தவிர்த்து விட்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு 22-04-2023 வரை பாக்கிய ஸ்தானத்திலும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் தாராள பண வரவுகள் ஏற்பட்டு உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். குருவின் சாதக நிலையால் பல்வேறு வளமான பலன்களை இக்காலங்களில் அடைய முடியும். வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.   உடல் ஆரோக்கியம் உங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. முடிந்தவரை குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, தேவையில்லாத மன அமைதி குறைவு ஏற்படும். சிலருக்கு பயணங்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பம் பொருளாதார நிலை கணவன்– மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பண பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் மன நிம்மதி குறைவு ஏற்படும். பங்காளியிடம் பேச்சை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நியாயப்படி நடந்து கொண்டாலும் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதப்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, பிறரை நம்பி ஒரு காரியத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாத வம்பு, வழக்குகளால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அனைத்து செயலிலும் நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உங்களுக்கு தொழில் நிமித்தமாக வேலை பளு அதிகரிப்பதால் ஓய்வு நேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. சில விஷயங்களை தியாகம் செய்தால்தான் தொழிலில் உங்கள் பெயரை நிலை நாட்ட முடியும். உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரம் என்றாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் சில இடையூறுகள் ஏற்படும். சக ஊழியர்கள் சரியாக பணிபுரியாததால் அவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய இருக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது ஒரு புத்திசாலித்தனமான செயலாகும். அரசியல் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். விவசாயிகள் பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். பங்காளிகள் மூலமாக வீண் பிரச்சினை வம்பு வழக்குகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது. விவசாய பணிகளுக்கு குறித்த நேரத்தில் வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால் மன நிம்மதி குறையும். பெண்கள் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்வார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பண உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். சில வாய்ப்புகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். தொழில் போட்டி காரணமாக சில நேரங்களில் தேவையற்ற இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ மாணவியர் நீங்கள் சரியாக படித்தாலும் ஞாபக மறதி காரணமாக அடைய வேண்டிய மதிப்பெண்களை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தேவையற்ற பொழுதுபோக்குகளையும், வீண் சகவாசத்தையும் குறைத்துக் கொண்டு தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

Click the links to get சனி பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore