இதுல ஏதாவது ஒன்னு வீட்ல வாங்கி வெச்சா வீட்ல காசுமழை கொட்டுமம்

Updated On

வீடு மற்றும் நாம் வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களைக் களைந்து, நமக்கு நேர்மறையான நல்ல பலன்களைக் கொடுப்பது.
​அதிர்ஷ்டப் பொருட்கள்

வாஸ்து என்பதற்கு வாழும் இடம் என்பது பொருள். இயற்கை சக்திகளான பஞ்ச பூத சக்திகளைச் சமநிலைப்படுத்தி, நாம் வாழும் வீட்டுக்குள் துன்பங்கள் நீங்கி, வளம் பெருகுவதற்கான முறைகளையே வாஸ்து சாஸ்திரம் என்கிறோம்.

வீட்டில் வளம் பெருகுவதற்காக சில செடிகளை நட்டு வைப்பதுண்டு. வீட்டில் உள்ள பொருட்களை, சரியான இடத்தில் சரியான திசையில் வைப்பது போன்றவற்றின் மூலம் வாஸ்து பிரச்னைகளை சரிசெய்து கொள்ள முடியும். அதேபோன்று சில பொருட்களை வீட்டுக்குள் வைப்பதன் மூலம், நாம் வாழுமிடத்தில் அஷ்ட லட்சுமிகளையும் நம்முடன் சேர்த்து வசிக்கச் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

​குபேரன் சிலை

குபேரன் சிலை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடத்திலும் வைத்திருத்தல் வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும். இது பொதுவாக எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். அதனால் தான் விதவிதமாக குபேரன் சிலையை வாங்கி வைத்திருப்பார்கள். அதிலும் பணமூட்டையுடன் இருக்கும் குபேரன் அதிக நன்மைகளைத் தருவார்.

புல்லாங்குழல்

பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான புல்லாங்குழல், மனதுக்கு இனிமையான இசையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள். அதோடு வீட்டில் இருக்கும் அத்தனை வாஸ்து தோஷங்களையும் தீர்க்கவல்ல சக்திகளையுடையது புல்லாங்குழல். ஆனால் பொதுவாக புல்லாங்குழலை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. அது சோகத்தை வாசிக்கும் ஒரு கருவி என்று சிலர் சொல்வார்கள். அப்படியெல்லாம் கிடையாது. தாராளமாக நீங்கள் உங்களுடைய பூஜை அறையில், வாங்கி வைக்கலாம்.

​நடன கணபதி

வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் கஷ்டத்தோடு கஷ்டமாக, நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் வாசலுக்கு நேராக இருக்கும்படி, இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும். அமர்ந்திருக்கும் கணபதியும் வீட்டில் வைப்பது நல்லது தான். ஆனால் நாட்டிய கணபதி செல்வத்தின் வளத்தையும் இன்பத்தையும் குறிப்பதன் அடையாளம். அதனால் நாட்டிய விநாயகரை வாங்கி வையுங்கள்.

சங்கு

எத்தகைய வாஸ்து தோஷங்களாக இருந்தாலும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி சங்குக்கு உண்டு. லட்சுமி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களோ சிலையோ வைத்திருப்பது இன்னும் சிறப்புக்குரியது. அதேபோல் சங்கு வலம்புரி சங்கு கிடைத்தால் நீங்கள் இன்னும் பெரிய அதிர்ஷ்டசாலி.

​ஒற்றைக்கண் தேங்காய்

ஒற்றைக்கண் தேங்காய்க்கு அபரீதமான சக்தி உண்டு. இதை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகள் அத்தனையும் விலகும். ஒற்றைக்கண் தேங்காய் கிடைப்பது மிக மிக அரிதான விஷயம். அப்படி கிடைத்தால் வாங்கி வீட்டில் வைத்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்து வாருங்கள்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore