தினமும் சோம்பு தண்ணீரை குடிப்பதனால் என்ன பயன் தெரியுமா?

Updated On

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்பது போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும்.

சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளாக சோம்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் சோம்பு கை மருத்துத்திலும் அதிக பயன்படுகின்றது.

அதிலும் சோம்பு தண்ணீர பல நோய்களுக்கு மருந்தாகுகின்றது.

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதனால் என்ன என்ன பயன் என்பதை பார்ப்போம்.

  • சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
  • ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
  • வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
  • சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
  • சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
  • தூக்கத்தைச் சீராக்கும். சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore