பனை மரத்தில் இவ்வளவு உள்ளதா?

Updated On

பனை மரம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது நுங்கு தான். நுங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இதில் இன்னும் அறிய உணவு வகைகள் உள்ளது. இதை ஒரு முறை சுவைத்தல் திரும்ப திரும்ப சுவைக்க தோணும் சுவை உடையவை.

பனை மரங்களின் நன்மைகள் (Panai maram Nanmaigal)

பனை மரங்கள் ஒரு வகை பசுமையான மரமாகும், அவை உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. அவர்கள் உயரமான, மெல்லிய டிரங்குகள் மற்றும் அவற்றின் பெரிய, விசிறி போன்ற இலைகளுக்கு பெயர் பெற்றவர்கள். நிழல் வழங்குவதிலிருந்து உணவு மற்றும் மருந்து உற்பத்தி செய்வது வரை பல்வேறு நோக்கங்களுக்காக பனை மரங்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கட்டுரையில், பனை மரங்களின் பல நன்மைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. நிழல் மற்றும் அழகு

பனை மரங்களின் மிகத் தெளிவான நன்மைகளில் ஒன்று நிழலை வழங்கும் திறன். பனை மரங்களில் பெரிய, விசிறி போன்ற இலைகள் உள்ளன, அவை சூரியனைத் தடுத்து, ஒரு சூடான நாளில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். கூடுதலாக, பனை மரங்கள் பெரும்பாலும் அலங்கார நோக்கங்களுக்காக அவற்றின் தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தின் காரணமாக பயன்படுத்தப்படுகின்றன. பலர் தங்கள் நிலப்பரப்புகளில் அழகையும் ஆர்வத்தையும் சேர்க்க பனை மரங்களை தங்கள் யார்டுகள் அல்லது தோட்டங்களில் நடவு செய்கிறார்கள்.

2. உணவு உற்பத்தி

உணவு உற்பத்திக்கு பனை மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சில வகையான பனை மரங்கள் தேங்காய்கள், தேதிகள் மற்றும் அகாய் பெர்ரி போன்ற உண்ணக்கூடிய பழங்கள் அல்லது கொட்டைகளை உருவாக்குகின்றன. இந்த உணவுகள் சுவையாக மட்டுமல்ல, அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை, அவை நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.

3. மருத்துவம்

உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பனை மரங்களும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில வகையான பனை மரங்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சேர்மங்கள் உள்ளன. பனை மரங்களின் இலைகள், பட்டை மற்றும் வேர்கள் கீல்வாதம், காய்ச்சல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

4. கட்டுமானப் பொருட்கள்

பனை மரங்களும் கட்டுமானப் பொருட்களின் மூலமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகள் மற்றும் பிற கட்டமைப்புகளைக் கட்டுவதற்கு மரம் வெட்டுவதற்கு சில வகையான பனை மரங்களின் டிரங்குகள் பயன்படுத்தப்படலாம். கூடுதலாக, பனை இலைகளை அவ்ச் கூரைகள், கூடைகள் மற்றும் பிற நெய்த பொருட்களை தயாரிக்க பயன்படுத்தலாம்.

5. சுற்றுச்சூழல் நன்மைகள்

இறுதியாக, பனை மரங்கள் பல சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன. அவை மண் அரிப்பு மற்றும் பாலைவனமாக்கலைத் தடுக்க உதவுகின்றன, மேலும் அவை பலவிதமான வனவிலங்கு இனங்களுக்கு வாழ்விடத்தை வழங்குகின்றன. கூடுதலாக, சில வகையான பனை மரங்கள் காடழிப்பு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன, இது சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் பல்லுயிரியலைப் பாதுகாக்க உதவுகிறது.

பனையிலிருந்து கிடைக்கும் உணவுகள் (Palm Tree Foods, Panaimaram Nungu)

பதநீர், கள், கருப்பட்டி, பனை வெள்ளம் முதலிய உணவுகள் கிடைக்கின்றன. இந்த உணவுகள் அனைத்தும் கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்புச் சத்து, வைட்டமின், நார்ச்சத்து முதலிய மருத்துவை குணங்கள் அடங்கியவை.
பெரும்பாலும் பனை மரங்கள் ஆசிய நாடுகளில் மட்டுமே வளரக் கூடியவை.

பனையின் பிறப் பயன்கள்

பூமியின் கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மரத்திலிருந்து பயனுள்ள பொருட்களும், உணவுகளும் கிடைக்கின்றன.
பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள்
கூடை, பெட்டி, பாய், ஓலை, விசிறி முதலியவையும் கிடைக்கின்றன. மேலும் பனங் கருக்கு, பாளை, பனங் கிழங்கு, பனை மட்டை, பனை ஓலை முதலியவையும் பனை மரத்தின் உறுப்புகளிலிருந்து கிடைக்கின்றன.

வரலாற்றில் பனை மரமும் – பனை ஓலைகளும்

உலகிலேயே முதல்முறையாக தோன்றியத் தாவரம் பனை தான் என்கிறது வரலாறு. கடுமையான வறட்சியிலும் பனை தளராது வளரும் திறன் கொண்டது. அதுமட்டுமல்லாது பூலகத்தின் கற்பக விருட்சகம் என்பதாலும் நமது முன்னோர்கள் பனையை வளர்த்துள்ளனர்.
பனை மரம் தமிழகத்தின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுப்பட்டது என்பதற்கும் சான்றாக சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துனையாய்
கொள்வார் பயன்தெரி வார்”
(தமக்கு ஒருவன் தினையளவு நன்மையைச் செய்தானாயினும், அதனால் விளையும் நன்மையை ஆராய்பவர்கள், அவ்வுதவியைப் பனையளவாகக் கருதுவர்)
இக்குறளின் மூலம் வள்ளுவர் பனையின் வளத்தையும், அதன் உயரத்தையும் குறிப்பிட்டுள்ளார். இயற்கையாகவே பனை மரங்கள் 30 அடி உயரம் வரை வளரக் கூடியவை. அதுமட்டுமல்லாது பனை மரம் வளர்ப்பது பழங்காலத்தில் ஒரு தொண்டாகவே கருதப்பட்டுள்ளது.

பனை ஓலைகள் எப்படி எழுதுவதற்கு பயன்பட்டது?

எழுத்தறிவு பெற்றவுடன் உலக மக்கள் பல்வேறு பொருட்களை எழுதுவதற்கு பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கிடைக்கும் பனைமரத்தின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகவும், நெளியும் தன்மைக் கொண்டதாலும், விரைவில் சிதைந்து விடமால் நீண்ட நாட்களுக்கு பயன்படும் என்பதாலும், பனை ஓலையை எழுத்து பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.
பனை மர ஓலைகளை நாறாகவோ அல்லது பட்டைகளாகவோ கிழித்து, அவற்றை தகுந்த அளவிற்கு வெட்டி, மூலிகை திரவங்களை பயன்படுத்தி பனை பட்டைகளை பதப்படுத்தி உள்ளனர்.
அப்படி பதப்படுத்திய பின்னர் அதனை வெயிலில் உலர்த்தி எழுத்து பணிகளை, எழுத்தாணிகளைக் கொண்டு எழுதியுள்ளனர் சங்கக் காலப் புலவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழர்களும் தனித்தனி ஏடுகளாக எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டதை ஏடுகளாக சேகரித்து நூலாக வடிவமைத்துள்ளனர்.
அதற்கு சான்றாக திருக்குறள் மற்றும் பழங்கால நூல்கள் சான்றாக உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் தற்போது எப்படி நமது பயன்பாட்டுக்கு கிடைத்தன?

தொடக்கத்தில் பழம் பெரும் தமிழ் காப்பியங்களும், நூல்களும் வாய்மொழியாகவே கூறப்பட்டு வந்தன. எழுத்தாணியும், ஓலைச்சுவடிகளும் தோன்றிய பின்னரே அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைகள் அனைத்தையும் சேகரித்து, அதனை அச்சு வடிவில் நூல்களாக கொண்டுவந்தது தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர்.
அவர் தனது வாழ்நாள் இறுதிவரை தொடர்ச்சியாக ஓலைகளை சேகரித்து, அதனை அச்சு வடிவில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் நூல்களாக மாற்றியதோடு, 3000 க்கும் மேற்பட்ட ஏடுகளையும் சேகரித்துள்ளார் உ.வே. சாமிநாத அய்யர்.
அவர் மட்டுமல்லாது தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் ஓலைச் சுவடிகளை சேகரித்து அதனை அச்சில் ஏற்றியுள்ளனர்.
மேலும் சென்னையிலுள்ள கீழ்த்திசை நூலகத்தில் பல நூற்றான்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்தும், அவற்றை புதுபித்தும் வருகிறது.

பனையும் – பனை  சார்ந்தத் தொழிலும்

பனையினை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக பனை மரம் ஏறுதல், கள் மற்றும் பதநீர் இருக்குதல், கருப்பட்டி மற்றும் பனை வெள்ளம் தயாரித்தல் போன்றப் பணிகளை பனைத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலும் இரண்டு மாத கால தொழிலாகவே இத்தொழில் விளங்குகின்றது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கூட தமிழர் திருநாளன பொங்கலன்று கருப்பட்டி மற்றும் பனை வெள்ளம் போன்றவற்றை பயன்படுத்தியே பொங்கல் செய்து, சூரியனுக்கு படையிளிட்டுள்ளனர்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore