சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறுவதற்கு இதுதான் காரணம்

Updated On

பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என்று கூறுவார்கள், அதற்கு பல்வேறு காரணங்களை அளிப்பார்கள். ஆனால் அதற்கான அறிவியல் காரணம் இருக்கிறது அதை தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள்  முழுவதும் வெளியேற்றப்படும்.

இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.

உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே சாப்பிட உடனே குளிக்க கூடாது.

குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.

உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore