வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள!

Updated On

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள! இதை ட்ரை பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கி விட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். எனவே உங்களுக்காக கோடைக்கேற்ற சில சரும பாதுகாப்பு குறிப்புகளை காணலாம்.

பாலில் குழைத்த சந்தனம் அல்லது கற்றாழை ஜெல் இவற்றை முகத்தில் பூசி, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இதனால் முகம் பொலிவு பெறும். வெள்ளரி சருமத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

தர்பூசணி பழத்துண்டுகளோடு புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவேண்டும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசி வர வெயிலால் பாதித்த சருமம் புத்துயிர் பெறும்.

மருதாணி இயல்பிலேயே குளிர்ச்சித் தன்மைக் கொண்டது. அதனால் விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வதாலும், தலைக்கு தேய்த்து குளிப்பதாலும் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore