வந்தே மாதரம் பாடல் வரிகள் | Vande Mataram Lyrics in Tamil

Updated On

வந்தே மாதரம் பாடல் தமிழில் | Vanthe Maatharam Tamil Lyrics

வந்தே மாதரம் என்பது 1882 ஆம் ஆண்டில் ஆனந்தமத் என்ற நாவலில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய இந்தியாவின் தேசியப் பாடல் ஆகும். முதலில் வங்காளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் எழுதப்பட்டது.

எந்தவொரு தேசிய நிகழ்வுகளிலும் தாய்நாட்டைப் போற்றுவதற்காக ஒரு தேசிய பாடல் பாடப்படுகிறது. இந்த பாடல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்குமாறு இருந்தது.

இது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மக்கள் மனதில் தேசபக்தி மற்றும் தேசிய உணர்வைத் தூண்டுவதற்கு பெரிதும் உதவியது. 1896 இல் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் கூட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் முதன்முறையாக இந்த பாடல் பாடப்பட்டது.

வந்தே மாதரம் என்பதன் பொருள்  “தாய் மண்ணே வணக்கம்” என்பதாகும்.

வந்தே மாதரத்தின் அசல் பாடல் வரிகள் | Vande Mataram Song Lyrics in Tamil

பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரத்தின் அசல் பதிப்பின் இரண்டு சரணங்கள் “இந்தியாவின் தேசிய பாடலாக” ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வந்தே மாதரம்!
சுஜலாம் சுபலாம்
மலயஜ சீதலாம்
ஷஸ்யஷியாமளாம்
மாதரம்
வந்தே மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸன
புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல
ஷோபினிம்
சுஹாசினிம் சுமதுர
பாஷினிம்
சுகதாம் வரதாம்
மாதரம்
வந்தே மாதரம்

வந்தே மாதரம் தேசிய பாடல் வரிகள்  | Vande Mataram Songs Lyrics

அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல் திசை எங்கும் பறந்தேன்
வெய்யிலிலும் மழையிலும் விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துளைதேன்
மனம் பித்தாய் போனதே.. உன்னை கண்கள் தேடுதே..
தொட கைகள் நீளுதே.. இதயம் இதயம் துடிக்கின்றதே..
எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..

வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்.. மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்.. ஆளாக்கி வளர்த்தாய்..
சுக வாழ்வொன்று கொடுத்தாய் பச்சை வயல்களை நீ பரிசளிதை
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய் கண்களும் நன்றியால் பொங்குதே..

வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே..
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுமே..
தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை, அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை..
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை, பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..!!

வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..

வந்தே மாதரம் பாரதியார் பாடல் வரிகள் |
bharathiyar patriotic songs in tamil lyrics

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
(வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
(வந்தே)



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore