மருந்து அதிகாரம் திருக்குறள் | Tamil Medicine in Thirukkural
திருக்குறள் மருந்து அதிகாரம் பொருள்
திருவள்ளுவர் திருக்குறளில் நட்பியலில், மருந்து எனும் அதிகாரத்தில் உணவு பற்றியும், நோய் பற்றியும் மற்றும் அதற்கான மருந்து பற்றியும் கூறியுள்ளார். நாம் முதலில் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டதா என்று அறிந்து பிறகு தான், அடுத்த வேளை உணவு சாப்பிட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார், அவ்வாறு உண்டால், நமது உடம்புக்கு மருந்து என்று ஒன்று தேவை இல்லை என்கிறார்.
மேலும் அறிய: 10 பிரபலமான திருக்குறள்
Marundhu Thirukkural Adhikaram | மருந்து அதிகாரம் எண் 95
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. – 941
மருந்தென வேண்டாவாம் | Maruthuvam Thirukkural
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – 942
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. – 943
இயற்கை உணவு பற்றிய திருக்குறள் | Thirukkural Maruthuvam
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. – 944
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – 945
மேலும் அறிய: தமிழ் நகைச்சுவை விடுகதைகள் with Answer
நோய் திருக்குறள்
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். – 946
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். – 947
உடல் நலம் பற்றிய திருக்குறள் | Thirukkural Marunthu
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – 948
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். – 949
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. – 950
மேலும் அறிய: அப்துல் கலாம் பொன்மொழிகள்